இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது அணியின் வருகை குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 4:53 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது அணியின் வருகை குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் (அரசு, தனியார், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளுக்கு இலவச உணவு, இருப்பிடம் வழங்கப்படும். போட்டிகள் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி அணிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது வருகை குறித்து பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர்களின் கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேந்தர் க.ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பதிவுக்கு: 96294-02895, 97882-25996, 99651-10173.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.