இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி 6 குறுவள மையங்களில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 4:55 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி 6 குறுவள மையங்களில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியை நிறைவு செய்து வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் பேசுகையில் கூறியதாவது: சமுதாயமும் பள்ளியும் ஒருங்கிணைந்து செயலாற்றினால்தான் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

நம்ம பள்ளி, நம்ம குழந்தைகள் என்ற எண்ணம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வந்தால்தான் பள்ளியும், மாணவர்களும் மேன்மையடைய இயலும் என்றார் அவர். மனித உரிமைகள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சட்டத்தில் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழு எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும், பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவை கலந்துரையாடல் மூலம் மூன்று நாள் பயிற்சியாக அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 546 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.