இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் நடைபெற்று வரும் புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கிருபை கிரியை உதவிக் கரங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2014, 8:34 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் நடைபெற்று வரும் புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கிருபை கிரியை உதவிக் கரங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
மையத்தின் தாளாளரும், கிருபை கிரியை உதவிக் கரங்கள் அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏசுதாஸ் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார். வத்திராயிருப்பு சி.எஸ்.ஐ. திருச்சபையின் சபைகுரு அருள்திரு ஜான் கமலேசன் விழாவை ஜெபித்து தொடங்கி வைத்தார்.
மதுரை, டி.வி.எஸ். மருத்துவமனையில் டாக்டர் தயாளன் கைவிடப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர் என 350 பேருக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி தேவ செய்தியளித்தார்.

தமிழாசிரியை ஜாய்ஸ், அத்திகுளம் சபைகுரு கிறிஸ்டோபர், ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ்.சார்லஸ் மனோகரன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்களின் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரேம் சீனிவாசகன், பிரேம்தாஸ், வசந்தி, ஜெபராஜ், சின்னப்பன், குமார், செபஸ்தியான், சீமோன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.