அதிகாலை 2 மணி அளவில் பழனிச்சாமியின் காலை யாரோ கட்டுவது போல இருந்துள்ளது. இதனையடுத்து அவர் எழுந்திருக்க முயற்சித்துள்ளார். கண் விழித்துப் பார்த்த போது 5 இளைஞர்கள் முகமுடி அணிந்து, ஒருவன் கையில் அரிவாளுடனும், ஏனைய 4 பேரும் கத்தியுடனும் படுக்கை அறையில் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அரிவாளுடன் வந்த நபர் பழனிச்சாமியை மிரட்ட, ஏனைய நால்வரும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட பழனிச்சாமி பீரோ எல்லாம் திறந்துதான் உள்ளது எல்லாவற்றையும் எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார். தனுஷ்கோடி தான் அணிந்திருந்த தாலி செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் இருந்த நகைகளும் சேர்த்து சுமார் 22 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள், டி.வி., மின் விசிறி, செல்போன்கள், தரை வழி போன், ரொக்கம் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.