ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவிலி. கோவிலில் ருத்ரயாகம்
தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோவிலில்


தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ருத்ரயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் தலைமையில் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் ருத்ரயாகம் நடைபெற்றது. யாகத்தை ரகு (எ) கைலாசபட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், ஒன்றியச் செயலாளர் மயில்சாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சரோஜா நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் அ.மகேஸ்வரன், ரவிக்குமார், காமராஜர், டி.வி.கந்தசாமி, முனியசாமி, முன்னாள் நகரச் செயலாளர் பி.கிருஷ்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...