ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி ஷெரினா (27). இவருக்குச் சொந்தமான 200 பவுன் தங்க நகைகள் அடமானத்தில் இருந்துள்ளது. இதனை திருப்ப முடியாத சூழ்நிலையில் இருந்தபோது மாரிமுத்து என்பவர் மார்ச் 2009-ல் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஷெரினாவுடன் மாரிமுத்து நெருங்கி பழகியுள்ளார். தனது மனைவியுடன் வாழப்பிடிக்காமல், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாயும் மாரிமுத்து கூறியுள்ளார். மேலும் நகைகளை திருப்பித் தருவதாயும் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக மாரிமுத்துவுடன் ஏற்பட்ட உறவினை அடுத்து 14.9.13-ம் தேதி ஷெரினாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து, ஷெரினாவை தனியாக ஒரு வீட்டில் குடியிருக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் மாரிமுத்து, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. உடனே வீட்டை காலி செய்துவிட்டு போய்விடு என்று கூறி துன்புறுத்தினாராம்.இது தொடர்பாக மாரிமுத்துவிடம் போய் ஷெரினா கேட்டபோது, ஷெரினாவை மாரிமுத்து அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் சேர்ந்து சதி செய்து மிரட்டினார்களாம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஷெரினா புகார் செய்தார்.
இப் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் மாரிமுத்து, அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...