இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும்

News image
Updated On :24 ஏப்ரல் 2015, 12:56 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (48). இவரது கணவர் பிலாவடி இறந்துவிட்டார். இவர் தனது மகனுடன் வியாழக்கிழமை ஆண்டாள் கோவிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்பக்க கதவை சீதாலட்சுமி பூட்டாமல் சென்றுவிட்டாராம். திரும்பி வீட்டிற்கு வந்த போது, வீட்டின் திறந்து கிடந்த பின்பக்கத்தின் வழியே வந்து, வீட்டின் பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.1.33 லட்சம் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேத்தூர்-கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35) என்பவரைக் கைது செய்து பொருட்கள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இவர் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எம். நகரில் குடியிருந்து வரும் மனைவியுடன் உள்ளார். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உண்டு. ஏற்கனவே ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.