ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் ஜான்சிராணி (28). வழக்குரைஞர். இவருக்கும் ஆலங்குளம் பழனிச்சாமி மகன் செல்வகுமார் என்பவருக்கும் 29.8.14-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, 10 பவுன் நகைகள் ரூ.50 ஆயிரம் வரதட்சிணை கொடுத்துள்ளார்கள். இது தவிர்த்து செல்வகுமாருக்கு 2 பவுன் செயின் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான பண்டபாத்திரங்கள் கொடுத்துள்ளார்கள். திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து, செல்வகுமார் மனைவி ஜான்சிராணியைப் பார்த்து நீ அசிங்கமாக, குட்டையாக உள்ளாய் என்று கூறி அவர் மனம் புண்படும்படி பேசி வந்துள்ளார். மேலும் உனது வழக்குரைஞர் படிப்பை பார் கவுன்சிலில் பதியக் கூடாது என்று மிரட்டினாராம். மேலும் உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி, ராஜபாளையத்தில் உள்ள ஜான்சிராணியின் சகோதரி வீட்டில் கொண்டுபோய் செல்வகுமார் விட்டுவிட்டாராம்.