இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண் வழக்குரைஞரை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 1:03 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் ஜான்சிராணி (28). வழக்குரைஞர். இவருக்கும் ஆலங்குளம் பழனிச்சாமி மகன் செல்வகுமார் என்பவருக்கும் 29.8.14-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, 10 பவுன் நகைகள் ரூ.50 ஆயிரம் வரதட்சிணை கொடுத்துள்ளார்கள். இது தவிர்த்து செல்வகுமாருக்கு 2 பவுன் செயின் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான பண்டபாத்திரங்கள் கொடுத்துள்ளார்கள். திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து, செல்வகுமார் மனைவி ஜான்சிராணியைப் பார்த்து நீ அசிங்கமாக, குட்டையாக உள்ளாய் என்று கூறி அவர் மனம் புண்படும்படி பேசி வந்துள்ளார். மேலும் உனது வழக்குரைஞர் படிப்பை பார் கவுன்சிலில் பதியக் கூடாது என்று மிரட்டினாராம். மேலும் உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி, ராஜபாளையத்தில் உள்ள ஜான்சிராணியின் சகோதரி வீட்டில் கொண்டுபோய் செல்வகுமார் விட்டுவிட்டாராம்.

ஜான்சிராணியின் பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் இது குறித்து பேசியும், செல்வகுமார் தரப்பு ஒத்துப்போகவில்லையாம். மேலும் கூடுதலாக 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் கேட்டார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான்சிராணி, அவரது கணவர் செல்வகுமார் மற்றும் இதற்கு உடைந்தையாக இருந்த மாமனார் பழனிச்சாமி மற்றும் மாமியார் ஜான்சிராணி ஆகியோர் மீது சனிக்கிழமை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.