ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுக்கு பாட்டக்குளம், கூனம்பட்டி, பாணாங்குளம் உள்ளிட்ட 6 கிராமங்களில் 23 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டது. 30 கம்பங்கள் சாய்ந்துவிட்டது. இதனால் இப் பகுதிகளில் முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்து அன்றைய தினம் இரவு சில கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. தற்போது மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தில் உள்ள 20 விவசாய இணைப்பு மற்றும் 40 வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் இப் பகுதியில் சீராகும் என்றார் அவர்.