இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சூறாவளி காற்று: 53 மின் கம்பங்கள் சேதம்: மின் இணைப்பு பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 53 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் 6 கிராமங்களுக்கான மின் இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 3:20 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 53 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் 6 கிராமங்களுக்கான மின் இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் கட்டையத்தேவன்பட்டியில் ஒரு தென்னை மரம் மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணபேரியிலும் சூறாவளிக்கு ஒரு வேப்பமரம் மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மின்சாரம் அப் பகுதில் தடைபட்டுள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுக்கு பாட்டக்குளம், கூனம்பட்டி, பாணாங்குளம் உள்ளிட்ட 6 கிராமங்களில் 23 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டது. 30 கம்பங்கள் சாய்ந்துவிட்டது. இதனால் இப் பகுதிகளில் முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்து அன்றைய தினம் இரவு சில கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. தற்போது மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தில் உள்ள 20 விவசாய இணைப்பு மற்றும் 40 வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் இப் பகுதியில் சீராகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.