பின்னர் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகள், அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுள்ளதை அவர் கண்டார். பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் பென்னிங்டன் காய்கறி சந்தைக்குள் செல்ல இயலாத அளவிற்கு அசுத்தங்கள் நிறைந்து காணப்பட்டைக் கண்ட அவர், நகராட்சி ஆணையாளரிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். ஒரு வாரத்திற்குள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பென்னிங்டன் காய்கறி சந்தை சீர்செய்யப்படாவிட்டால், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையை அணுக இருப்பதாகக் கூறினார்.