விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ராஜபாளையத்தில் நடைபெற்ற விபத்தில் காயமுற்றவருக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.5 லட்சம் இழுப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும்


ராஜபாளையத்தில் நடைபெற்ற விபத்தில் காயமுற்றவருக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.5 லட்சம் இழுப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ராஜபாளையம், சந்பந்தபுரம், கீழபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தராஜா (39). இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு மெட்டல் பவுடர் கம்பெனியில் உதவி பொறியாளராக வேலை செய்து வந்தார். 20.5.13-ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம், புகேழந்தி தெரு வழியே சிக்கந்தராஜா வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிக்கந்தராஜா பலத்த காயமடைந்தார்.
தனக்கு இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், கோவில்பட்டியில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, சிக்கந்தராஜாவுக்கு ரூ.5,09,200 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...