கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் 34வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு

News image
Updated On :17 பிப்ரவரி 2015, 1:54 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் 34வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

கடந்த 33 ஆண்டுகளாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடராஜர் கோயிலுக்குள் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியை கோயிலுக்குள் நடத்த அனுமதி கோரி பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் தீட்சிதர்களே கோயிலுக்கு நாட்டியாஞ்சலி விழா நடத்துவதாக அறிவித்ததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் சிதம்பரம் தெற்குரதவீதியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் (வி.எஸ்.டிரஸ்ட் இடத்தில்) 34-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். தொடர்ந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாடுகின்றனர்.  தினமும் மாலை 6 மணி முதல் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை நாட்டியமாடிய கலைஞர்கள்: பெங்களூர் நடராஜர் ஆர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள் பரதம், புதுதில்லி ரெட்டி டி.லட்சுமி பரதம், ரஞ்சனி நாயர் கூச்சிப்புடி நடனம், தமிழ்நாடு இசை, கவின் கலைப்பல்கலைக்கழக மாணவியரின் நமசிவாய நாட்டிய நாடகம், பெங்களூர் சுரபி சந்தோஷ், மும்பைசோனாலி தப்ராய், கொல்கத்தா தேபல் தேவ்ஜனா, மும்பை பூஜா பலேராவ் ஆகியோரின் பரதம்

விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.பாலதண்டாயுதம், செயலாளர்கள் ஆர்.நாகசுவாமி, ஏ.சம்பந்தம், இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் ஆர்.ராமநாதன் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.சபாநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.