ஸ்ரீவில்லிபுத்தூர், வடக்குரதவீதி ஒட்டியுள்ள தகரகொட்டகைக்குள் ஸ்ரீதேவி மேட்சிங் சென்டர் வைத்திருப்பவர் ச.மாரிமுத்து மூப்பனார் (65). இவரது வீட்டிற்கு பின்புறம் 24.1.15-ம் தேதி காலை, அழகிய இளம் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வந்து நின்று கொண்டிருந்துள்ளார். மாரிமுத்துவைப் பார்த்து இளம் பெண் மாமா, மாமா என்று கூச்சலிட்டு கதவைத் தட்டியுள்ளார். மாரிமுத்து வீட்டு கதவைத் திறந்துள்ளார். நீங்கள்தான் என் கணவர் என்றும், குழந்தைகள் உங்கள் குழந்தைகள் என்று கூச்சலிட்டுள்ளார். மாரிமுத்து இவர்களை வீட்டிற்குள் அழைத்து விசாரித்துள்ளார். அதில் இளம் பெண்ணின் பெயர் செரினாபீவி (எ) சரிதா என்றும் பிள்ளைகளின் பெயர்கள் கட்சிதாபீவி (எ) யசோதை, காமிலாபீவி (எ) சாந்தி என்று கூறியுள்ளார்கள்.