இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட சிறப்பு ஏற்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் அதிமுக வினர் தீவிரமாக ஏற்பாடு

News image
Updated On :19 பிப்ரவரி 2015, 9:18 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் அதிமுக வினர் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இது குறித்து ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி (செவ்வாய்கிழமை), காலை மடவாளர்வளாகத்தில் உள்ள காளியம்மன்கோவிலில்  ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வந்து தமிழகத்தை மிகுந்த மனநிறைவு, மன அமைதலுடன் ஆட்சி செய்ய வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் நடைபெறுகிறது.

பின்னர் ஒன்றியக் குழுத் தலைவர் தனது சொந்தச் செலவில் 670 பேருக்கு வேஷ்டி, 670 பேருக்கு சேலை, 1670 பேருக்கு சிறப்பு அன்னதானம் செய்கிறார்.

விழாவில் மக்களவை உறுப்பினர்கள் டி.ராதாகிருஷ்ணன், எம்.வசந்தி முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் எஸ்.ஆர்.துரைப்பாண்டியன், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் கே.மயில்சாமி, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் கே.முத்துப்பாண்டியன், வழக்குரைஞர்கள் எம்.ஜெகதீசன், ஆர்.முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மீனா, கே.அய்யம்மாள், எஸ்.மயில்ராவணன், ஆர்.ராஜகேபால் மற்றும் கட்சியியின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து விரிவாக செய்து வருகிறார் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.