இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்தியவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :2 ஜனவரி 2015, 2:52 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளராக வேலை செய்து வருபவர் சந்திரன் (36). இவர் வியாழக்கிழமை இரவு தலைமைக் காவலர் கனகராஜூடன் மதுரை சாலையில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அந்த இடத்தில் வல்கனைசிங் கடை வைத்திருக்கும் செல்வக்குமார் (45) என்பவர் திறந்த வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை சார்பு ஆய்வாளர் சந்திரன் கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற செல்வக்குமார், சார்பு ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, சார்பு ஆய்வாளரின் வலது கையின் நடுவிரலை செல்வக்குமார் பலமாகக் கடித்துள்ளார். இதில் சார்பு ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சார்பு ஆய்வாளர் சந்திரன், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வக்குமாரைக் கைது செய்தனர். சார்பு ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.