லாரியில் அடிபட்டு மில் தொழிலாளர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மில் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மில் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மு.ஆசைத்தம்பி (46). இவர் ராஜபாளையம் அருகேயுள்ள மில்லில் கூலி வேலை செய்து வந்தார். சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆசைத்தம்பி வேலைக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி ஆசைத்தம்பி மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த மேட்டூர், ஜலகண்டபுரம், சு.மோகன் (49) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...