இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலையும், புதிய பேருந்து நிலையமும் உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2015, 5:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலையும், புதிய பேருந்து நிலையமும் உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்டத் தலைவர் கி.பசுபதிதேவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ரா.பிரபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் க.சுப்புராஜ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரி்விக்க வேண்டும். அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை தேசபக்தி தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலையும், புதிய பேருந்து நிலையமும் உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.165 கோடியை தமிழக அரசு உடனே வழங்கி, ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள விஷக் காய்ச்சலைத் தடுக்க நகராட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூர் வைப்பாற்றை சுத்தம் செய்து, வேலிக் கருவேலம் மரங்களை அகற்றி, சாக்கடை நீர் கலக்காமல், தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தின் வறட்சியைப் போக்க பம்பா, அழகர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.