9174 இந்திய வெப்சைட்கள் உலகம் முழுவதும் திருடப்பட்டுள்ளது (Hacked). தேசிய சைபர் குற்றங்களுக்கான பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு விஷயத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத சக்திகள் சைபர் குற்றவாளிகள் மூலம் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்க நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்.2015-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் அளவு 3 லட்சமாக உயரும் அபாயம் உள்ளது. 302 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான திறன்களை வளப்பதற்கு முன்னுரிமை தரப்படுகிறது. இந்தியாவை சமீபகாலமாக அமெரிக்கா, துருக்கி, சீனா, பிரேசில், அல்ஜீரியா, பாகிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகள் குறிவைத்து தாக்குகின்றன. இதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், இந்தியாதான் சைபர் குற்றவாளிகளை உருவாக்குவதற்கு ஏற்ற நாடாக உள்ளது என்று கூறுகிறார்கள்.