ஸ்ரீவில்லிபுத்தூர், டி.மானகசேரியைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவரது மனைவி பரமேஸ்வரி (23). இவர்களுக்கு சுந்தரமூர்த்தி என்ற 4 வயது மகன் உண்டு. குருசாமி கட்டட ஒப்பந்தாரராக இருந்தார். 28.6.2010-ம் தேதி திருநெல்வேலி-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி இந்திரா காலனி அருகே குருசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேன் மோதியதில் உயிரிழந்தார்.இதனையடுத்து இவரது மனைவி பரமேஸ்வரி உள்ளிட்ட வாரிசுதாரர்கள் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், விருதுநகர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாரிசுதாரருக்கு ரூ.7.97 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.