இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு: சுப்பிரமணியன் சுவாமி
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. அதை சசிகலா அணிக்குதான் ஒதுக்கியிருக்க வேண்டும்


இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. அதை சசிகலா அணிக்குதான் ஒதுக்கியிருக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: - 1971-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தீர்ப்பானது எந்த அணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்க வேண்டும் என்கிறது.
அதனடிப்படையில் சசிகலா அணிக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். சசிகலா அணியில்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் எம்.எல்.ஏக்களே இல்லை. இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறானது என்றுதான் சொல்வேன் என்று கூறினர்.
மேலும் இரட்டை இலையை முடக்க பாஜக நிர்பந்தம் செய்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அது தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...