/

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கடல் எல்லைதாண்டி வந்ததாக தங்கச்சி

News image
Updated On :17 அக்டோபர் 2017, 3:08 am

DIN

ராமேஸ்வரம்:  தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கடல் எல்லைதாண்டி வந்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எல்லை தாண்டி வருவதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதும் அவர்களது படகுகளை சேதப்படுத்தும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுநதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.