இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் கார் மோதி இளைஞர் பலி

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஓ. ராகவேந்திரா சென்ற சொகுசு கார் பாதசாரி ஒருவர் மீது மோதி பலியான சம்பவம்

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 8:26 am

DIN

பெங்களூரு:  கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஓ. ராகவேந்திரா சென்ற சொகுசு கார் பாதசாரி ஒருவர் மீது மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மடப்புரா பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு எடியூரப்பா மகன் ராகவேந்திரா மற்றும் ஷகரிபுரா எம்.எல்.ஏ ராகவேந்திரா ஆகியோர்  எஸ்யூவி வகை சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையைக் கடக்க முயன்ற சுரேஷ்(24) என்பவர்  மீது சொகுசு கார் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஹொனலலி காவல் ஆய்வாளர் ஜே.ஆர்.ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.பீ. ரணகசார்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்து குறித்து நியமதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

கடந்த மக்களவை தேர்தலின்போது, பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது அந்த தொகுதி எம்.பி.யாக எடியூரப்பா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.