பெரியாரின் 141-வது பிறந்த நாள்: திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் 141-வது பிறந்த நாள்: திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
Published on
Updated on
1 min read


சென்னை: பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க பதிவில், சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் பெரியாரின் பிறந்தநாள்.

தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம்!

பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்! வாழ்க பெரியார்! என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com