இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மும்பையில் இன்று வியாழக்கிழமை (செப்.19) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2019, 4:55 am

DIN


மும்பை: மும்பையில் இன்று வியாழக்கிழமை (செப்.19) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மும்பையின் தெற்கு பகுதிகளில் இரவு 10.30 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. 

மும்பை புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல், இரவு 10.30 மணி வரை 54 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தெற்கு மும்பையில் 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

இந்நிலையில், மும்பை மற்றும் ராய்காட்டில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்றும், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

மேலும் மும்பையில் பொதுவாக வானம் மேகமூட்டமாகவும், மிதமான மழையும் பெய்யக்கூடும். நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையா அடுத்து மும்பை, தானே மற்றும். பால்கர், கோன்கான் பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை (செப்.19) விடுமுறை அறிவித்து மஹாராஷ்டிர மாநில பள்ளி, கல்வித்துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.