இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன வெழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

News image
உதகை நகரில் தொடர்ந்து பலத்த மழை மற்றும் காற்றில் விழுந்துள்ள மரங்கள், மின்கம்பங்கள்.
Updated On :5 ஆகஸ்ட் 2020, 5:12 am

DIN


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன வெழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

Story image

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக அவலாஞ்சி பகுதியில் 390 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் 11 இடங்களில் மழை சதம் அடித்துள்ளது. அப்பர் பவானியில் 306 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Story image

உதகை நகரில் தொடர்ந்து பலத்த மழை மற்றும் காற்றில் விழுந்துள்ள மரங்கள், மின்கம்பங்கள்.

மேலும் பந்தலூர் பகுதியில் 161 மி.மீ, நடுவட்டத்தில் 147 மி.மீ, கிளன்மார்கனில் 137 மி.மீ, கூடலூரில் 128 மி.மீ, தேவாலாவில்126 மி.மீ, சேரங்கோட்டில் 136 மி.மீ, எமரால்டில் 145 மி.மீ, பாலகொலா பகுதியில் 111 மி.மீ,  குந்தா பகுதியில் 70 மி.மீ, உதகையில் 40 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Story image

உதகை நகரில் தொடர்ந்து பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக இரண்டாவது நாளாகவும் மின்சாரம் தடைபட்டுள்ளது. உதகை நகரில் ஏராளமான மரங்கள் விழுந்து வருவதால் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Story image

தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.