தமிழ்வழி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்

தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Updated on
1 min read

தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதாவிற்கு செவ்வாய்க்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இடஒதுக்கீட்டிற்கான மசோதாவிற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என கடந்த வாரம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com