இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அனைத்து மாநில விவசாயிகளும் தில்லி வர அழைப்பு: விவசாய சங்கங்கள்

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து மாநில விவசாயிகளையும் தில்லி வர அழைப்பு விடுத்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2020, 12:03 pm

ANI

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து மாநில விவசாயிகளையும் தில்லி வர அழைப்பு விடுத்துள்ளனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும், திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சட்டத்திருத்தம் குறித்த பரிந்துரைகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநில விவசாயிகளும் தில்லி வர அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.