நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கவிழா  நடைபெற்றது.

News image

வைத்தீஸ்வரன்கோவில் சந்தைவெளியில் புதிய மின்மாற்றியை தொடங்கிவைக்கிறார் எம்எல்ஏ பிவி.பாரதி.

Updated On :27 ஜூன் 2020, 9:35 am

DIN

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் 200வது மின்மாற்றி தொடக்கவிழா  நடைபெற்றது.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் சந்தைவெளி பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தால் பல மாதங்களாக அப்பகுதி மக்கள் அவதியடைந்துவந்தனர். குறைந்தமின்னழுத்தத்தால் மின்சாத னப்பொருட்கள் பழுதடைந்து சிரமப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வைத்தீஸ்வரன்கோவில் பிரிவு அலுவலக மேம்பாட்டு திட்டத்தில் 200வது மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு அதன் தொடக்கவிழா செயற்பொறியாளர் எஸ்.சதீஸ்குமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, கூட்டுறவு வங்கி தலைவர் போகர்.சி.ரவி முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ பிவி.பாரதி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.  

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம்,நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.