ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் ஓர் அமைச்சருக்கு கரோனா

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் மற்றும் அவரது மனைவிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் மற்றும் அவரது மனைவிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தாக்கூர் தனது டிவிட்டர் பக்கத்திலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவர் இரண்டு நாள்களுக்கு முன், சிம்லாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களுடம் கலந்து கொண்டார்.

முன்னதாக, முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் சில அமைச்சர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com