"கரோனா நோய்த் தொற்று மிகப் பெரிய சவால், ஆனால், அதேவேளையில் ஒரு வாய்ப்பும்கூட" என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
"கரோனா தொற்று மிகப் பெரிய சவால், ஆனால் மிகப் பெரிய வாய்ப்பும்கூட. இந்த சிக்கலான தருணத்தில் தேவைப்படுகிற புதுமையான தீர்வுகளைக் காண நம்முடைய எண்ணற்ற விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தரவு வல்லுநர்களைத் திரட்ட வேண்டியுள்ளது" என்று தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.