இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு
Updated On :26 மே 2021, 3:46 pm

DIN

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் பாஜக 6 இடங்களைப் பெற்றிருந்த நிலையில் மேலும் 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் பலம் 9 ஆக இருந்தது.

மேலும் இதுவரை 2 சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவளித்த நிலையில் தற்போது திருபுவனை சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆதரவளித்துள்ள நிலையில் பாஜகவின் பலம்  12ஆக அதிகரித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 6 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், 3 பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதன்கிழமை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனை சந்தித்து பேசினர். 

ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில் துணை நிலை ஆளுநருடன் அக்கட்சியினர் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.