தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.