இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!

லெஜண்ட் சரவணனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக....

Published On :9 டிசம்பர் 2024, 5:18 pm IST

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக புகைப்படங்கள், விடியோ வெளியிட்டு லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.