டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பூங்காற்று திரும்புமா... மோதலும் காதலும் சீரியல் நாயகனின் புதிய தொடர்!

சமீர் - ஷோபனா நடிக்கும் புதிய தொடர் குறித்து...

News image

சமீர் - ஷோபனா

Updated On :18 டிசம்பர் 2024, 3:29 pm IST

மோதலும் காதலும் சீரியல் நாயகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட தொடர் மோதலும் காதலும் சீரியல்.

பள்ளி செல்லும் பெண் குழந்தையுடன் இருக்கும் விவாகரத்தான ஆண் தொழிலதிபர் மற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர் இடையே நடக்கும் கதைதான் மோதலும் காதலும். இத்தொடர் 304 எபிஸோடுகளுடன் குறுகிய காலத்தில் முடிவடைந்தது.

இத்தொடரில் நாயகனாக நடித்த சமீர், தற்போது முத்தழுகு தொடர் நாயகி ஷோபனாவுடன் புதிய தொடரில் நடிக்கிறார்.

இத்தொடருக்கு பூங்காற்று திரும்புமா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் நடிகர் ஆனந்த்பாபு பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

பூங்காற்று திரும்புமா தொடரின் படப்பிடிப்பு நேற்று(டிச. 17) பூஜையுடன் தொடங்கப்பட்டது. இத்தொடரை தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இத்தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.