இந்தியாவில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்து ஹுண்டாய் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார், இந்தியாவில் இரு வகைகளில் (வேரியன்ட்) கிடைக்கின்றன.
2015 முதல் தற்போதுவரை 10 லட்சம் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய வணிக சந்தையில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாவதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் மத்திய ரக சொகுசுக் கார்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவிலிருந்து மட்டும் இதுவரை 28 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுண்டாய் குறிப்பிட்டுள்ளது. இதுவும் ஹுண்டாய் நிறுவனத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய ஹுண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் கார்க், பலதரப்பட்ட இந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்ததால், க்ரெட்டா புதிய பிராண்டாக வளர்ந்துள்ளது. ஒரு மில்லியன் க்ரெட்டா கார்கள் இந்திய சாலைகளில் செல்கின்றன. இந்திய வாடிக்கையாளர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்து ஹுண்டாய் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார், இந்தியாவில் இரு வகைகளில் (வேரியன்ட்) கிடைக்கின்றன.
2015 முதல் தற்போதுவரை 10 லட்சம் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய வணிக சந்தையில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாவதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் மத்திய ரக சொகுசுக் கார்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவிலிருந்து மட்டும் இதுவரை 28 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுண்டாய் குறிப்பிட்டுள்ளது. இதுவும் ஹுண்டாய் நிறுவனத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய ஹுண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் கார்க், பலதரப்பட்ட இந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்ததால், க்ரெட்டா புதிய பிராண்டாக வளர்ந்துள்ளது. ஒரு மில்லியன் க்ரெட்டா கார்கள் இந்திய சாலைகளில் செல்கின்றன. இந்திய வாடிக்கையாளர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் அக்ஷர் படேல் புதிய சாதனை!

ரூ. 10 லட்சத்துக்குள் சிறந்த சிஎன்ஜி கார்கள்!

பிரதமா் மோடியுடன் அமேசான் சிஇஒ சந்திப்பு: ரூ. 1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

இந்தியாவில் 7,000 எரிபொருள் நிலையங்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



