வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகை சனிக்கிழமை கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுதலைக்காடு பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.
சிறுதலைக்காடு பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.
Published on
Updated on
1 min read

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகை சனிக்கிழமை கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்தப் பகுதி கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களது வலையில் கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று மீன்பிடி வலையில் சிக்கியதாம்.

சிறுதலைக்காடு பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.
ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் சரண்

இந்தப் படகினை மீனவர்கள் தங்களின் படகுடன் கட்டி இழுத்து வந்து சனிக்கிழமை அதிகாலையில் கரை சேர்த்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் குழும் போலீசார் படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com