
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் தள பக்கம் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து பல்வேறு விளம்பரங்களை இப்பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. எனவே அதில் இடப்படும் பதிவுகள் எதுவும் கட்சியைச் சார்ந்தது அல்ல.
எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம். விரைவில் கணக்கு மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.