குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஏழாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை எதிரொலியாக  குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
தொடர்மழை எதிரொலியாக குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
Published on
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஏழாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏழாவது நாளாக குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை எதிரொலியாக  குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

தொடர் கனமழை காரணமாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com