சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Anna university
அண்ணா பல்கலை. (கோப்புப்படம்)Din
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com