திருநெல்வேலி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 813 மாணவர்களும், 10 ஆயிரத்து 683 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 312 மாணவர்களும், 10,393 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களில் 93.42 சதவிகிதமும் பேரும், மாணவிகளில் 97.29 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவிகள் 95.63 சதவிதம் பேரும், மாணவர்கள் 87.37 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 சதவிதமாக உள்ளது.
மாநில அளவில் 95.53% பேர் தேர்ச்சியுடன் திருநெல்வேலி மாவட்டம் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வழக்கம்போல, நிகழாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தென்காசி - 22 ஆவது இடத்தையும், திருநெல்வேலி 16 ஆவது இடத்தையும், தூத்துக்குடி - 9 ஆவது இடம் மற்றும் கன்னியாகுமரி - 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை 30-இல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு நிதியுதவி

நீட் மறுதோ்வு முடிவுகள் வெளியீடு: இரு மாணவா்கள் முதலிடம்

மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை!
விடியோக்கள்



