திருநெல்வேலி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 813 மாணவர்களும், 10 ஆயிரத்து 683 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 312 மாணவர்களும், 10,393 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களில் 93.42 சதவிகிதமும் பேரும், மாணவிகளில் 97.29 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவிகள் 95.63 சதவிதம் பேரும், மாணவர்கள் 87.37 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 சதவிதமாக உள்ளது.
மாநில அளவில் 95.53% பேர் தேர்ச்சியுடன் திருநெல்வேலி மாவட்டம் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வழக்கம்போல, நிகழாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தென்காசி - 22 ஆவது இடத்தையும், திருநெல்வேலி 16 ஆவது இடத்தையும், தூத்துக்குடி - 9 ஆவது இடம் மற்றும் கன்னியாகுமரி - 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2: மொத்த தேர்ச்சி விகிதம் 85.20%

பிளஸ் 2: மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



