பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 813 மாணவர்களும், 10 ஆயிரத்து 683 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 312 மாணவர்களும், 10,393 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களில் 93.42 சதவிகிதமும் பேரும், மாணவிகளில் 97.29 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவிகள் 95.63 சதவிதம் பேரும், மாணவர்கள் 87.37 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 சதவிதமாக உள்ளது.

மாநில அளவில் 95.53% பேர் தேர்ச்சியுடன் திருநெல்வேலி மாவட்டம் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வழக்கம்போல, நிகழாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் தென்காசி - 22 ஆவது இடத்தையும், திருநெல்வேலி 16 ஆவது இடத்தையும், தூத்துக்குடி - 9 ஆவது இடம் மற்றும் கன்னியாகுமரி - 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com