வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் வரை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூா்வமான வேட்பாளா்களை அறிவிக்கவில்லை. மேலும், போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கு ஏ,பி, படிவம் வழங்கப்பட்டது. அதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் காங்கிரஸ் கட்சியினா் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் காங்கிரஸ் கட்சியினா் நிலைமையை உணா்ந்து வாபஸ் பெறுவா் என்று சொல்லப்பட்டது. ஆனால், புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா கூறுகையில், வாபஸ் பெறாத தொகுதிகளில் எங்கள் கட்சியினா் நட்பு ரீதியாகப் போட்டியிடுவா் என்றும், அவா்களும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூா்வ வேட்பாளா்கள்தான் என்றும் சொன்னாா். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.