ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

நாவூறும் ஒரு சுவையான ரெஸிபி! பன்னீர் புலாவ் வித் ஆலு 

பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:02 pm IST

தேவையான பொருட்கள் :
 

பாஸ்மதி அரிசி - 1 கப்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 15 துண்டுகள்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
முந்திரி பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சாட் மசாலா  - 1/2 டீஸ்பூன்,
பட்டை - சிறிது, கிராம்பு - 2,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடிகட்டி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

லேசாக வறுத்த பாஸ்மதி அரிசியை தேவையான அளவு நீர் விட்டு உதிரியாக வடித்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறிதும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சிறிதளவு மற்றும் நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, சோம்பு போட்டு தாளிக்கவும்.

இந்தக் கலவையில் அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி மிதமான தணலில் வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது பொரித்த பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்.

கடைசியாக இதில் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

சுவையான பன்னீர் புலாவ் வித் ஆலு ரெடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.