சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

இ சிம்! அதென்ன?

செல்போனுக்கு சிம் கார்ட் என்பது உயிர்நாடியைப் போல் செயல்படுகிறது. பல சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:26 pm IST

செல்போனுக்கு சிம் கார்ட் என்பது உயிர்நாடியைப் போல் செயல்படுகிறது. பல சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நேரத்துக்கு ஒரு நம்பரில் தொடர்பு கொள்வதை சிலர் பொழுது போக்காக வைத்து கொண்டுள்ளனர்.

இந்த சிம் கார்டுகள் வடிவத்தில் மைக்ரோ, மினி, நானோ சிம் கார்ட் என்று அளவில் குறைந்து கொண்டே வந்துள்ளன. 

இது தற்போது இ-சிம் என்ற கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இ-சிம்மை யாரும் பார்க்கவும் முடியாது, தனியாக எடுக்கவும் முடியாது என்பதுதான் இதன் சிறப்பு. ஸ்மார்ட் போன்களுக்குள்ளே சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி நமக்கு தேவையான செல்போன் ஆப்ரேட்டர்களை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இதைச் செய்துவிடலாம் . ஒரு சிம்மை அலுவலக பயன்பாட்டுக்காக, வெறும் டேட்டாவுக்காக பயன்படுத்தவும், மற்றொரு சிம்மை தனிப்பயன்பாட்டுக்காகவும், எஸ்எம்எஸ், தொலைபேசி பயன்பாட்டுக்காகவும் என நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதி இந்த இ-சிம்களில் உண்டு.

வழக்கமாக வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்குள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது இங்குள்ள சிம்கார்டுக்கு இண்டர்நேஷனல் ரோமிங்கில் பயன்படுத்த வேண்டும். 

ஆனால் இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்தப் பகுதி செல்போன் ஆப்ரேட்டரை உடனடியாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். இதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு ரோமிங் கட்டணங்களும் இருக்காது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகையால், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த இ-சிம் பெரும் உதவியாக இருக்கும். 

ஏற்கெனவே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த வகையான சிம்கள் உள்ளன. அண்மையில் அறிவிக்கப்பட்ட இரட்டை சிம்கள் கொண்ட ஐ போன்களில் இந்த இ-சிம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் முதல்முறையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த இ-சிம்கள் விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.