கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக...
அரைக்கீரை...
முளைக்கீரை...
அகத்திக்கீரை...
முருங்கைக்கீரை...
புளிச்ச கீரை (கோங்குரா)...
சிறுகீரை...
வல்லாரைக் கீரை...
மணத்தக்காளிக் கீரை...
பசலைக்கீரை...
பாலக் கீரை அலைஸ் பருப்புக் கீரை...
குப்பைக்கீரை...
பச்சைப் பொன்னாங்கன்னி...
இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.
சிவப்புப் பொன்னாங்கன்னி...
பச்சைப் பொன்னாங்கண்ணியில் இருக்கும் அத்தனை சத்துக்களும், பயன்களும் சிவப்புப் பொன்னாங்கண்ணிக்கும் உண்டு. ஆனால் பச்சை தான் நாட்டுப் பொன்னாங்கண்ணி என கொண்டாடப்படுகிறது. சிவப்பை சீமைப் பொன்னாங்கண்ணி என்றும் அதில் நாட்டுப் பொன்னாங்கண்ணியைக் காட்டிலும் சத்துக்களும், பயன்களும் குறைவு என்றும் மக்கள் கருதுகிறார்கள். சீமைப் பொன்னாங்கண்ணியை வெறும் அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
வெந்தயக்கீரை...
புதினாக்கீரை...
கொத்தமல்லிக்கீரை...
கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.
கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.
- மேலே பட்டியலிடப்பட்டுள்ள போன்ற கீரைகள், நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டுப் பழகிய கீரை வகைகள்.
சுக்காங்கீரை...
முடக்கத்தான் கீரை...
வாரம் ஒருமுறை முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடலில் தங்கும் தேவையற்ற நச்சு வாயுக்கள் வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளும் அகன்று விடும்.
முள்ளங்கி இலைக்கீரை...
முள்ளங்கி கீரையில் இருக்கு வைட்டமின் எ , வைட்டமின் பி, வைட்டமின் சி இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுதான், ஆனால் இந்த கீரையை அதிகம் உணவில் உட்கொள்ள கூடாது சிலருக்கு இதனால் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. வயிற்று கோளாறுகள் அல்லது இதய கோளாறுகள் ஏற்படலாம். அதனால் குறைந்த அளவிலே எடுத்து கொள்ளுங்கள்.
நீர் அடைப்பு தொல்லையா முள்ளங்கி கீரையை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட சில நாட்களில் பிரச்சனை இருக்காது.
அனைத்து கீரை வகைகளும் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது போலவே இந்த முள்ளங்கி கீரை கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்கும்.
இதில் இருக்கும் புரத சத்துக்கள், கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்.
தூதுவளைக் கீரை...
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கீரைகள் எல்லாம் இப்போதும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றையும் கூட நாம் முழங்கால் வலியென்றோ, மூட்டு வலியென்றோ, உடலில் இரும்புச் சத்து குறைவு, நார்ச்சத்து குறைவு போன்ற காரணங்களுக்காகவோ நாம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சமைத்துச் சாப்பிட்டிருப்போம்.
இவை தவிரவும் இன்னும் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றை மூலிகைக்கீரைகள் எனப் பெயர் சூட்டி நாம் பெரும்பாலும் சமைத்து உண்பதைத் தவிர்த்து வருகிறோம். சிலவற்றை சமைத்தும் உண்ணக்கூடாது. அவற்றை பாரம்பர்ய சித்த மருத்துவர்களின் உதவியுடன் கஷாயமாகவோ அல்லது குளிகைகளாகவோ உருமாற்றித்தான் உண்ணவோ, அருந்தவோ முடியும். அவற்றுள் சிலவற்றின் பெயர்கள்...
மஞ்சள் கரிசலை...
பிண்ணாக்குக் கீரை...
பரட்டைக்கீரை...
வெள்ளைக்கரிசலைக் கீரை
கல்யாண முருங்கைக் கீரை...
கீழாநெல்லிக் கீரை...
நஞ்சுமுண்டான் கீரை அல்லது நச்சுகொட்டைகீரை...
தும்பைக்கீரை...
மணலிக்கீரை...
சக்ரவர்த்திக் கீரை...
தவசுக்கீரை
சாணக்கீரை...
இந்தக் கீரையின் புகைப்படம் கிடைக்கவில்லை...
விழுதிக்கீரை...
கொடி காசினி...
துயிளிக்கீரை...
இந்தக் கீரைக்கும் படம் கிடைக்கவில்லை.
ஓமவல்லி அலைஸ் கற்பூரவல்லி கீரை...
துத்திக் கீரை...
வாதநாராயணன் கீரை...
காரகொட்டிக் கீரை, மூக்குதட்டை கீரை, நறுதாளி கீரை...
இந்த மூன்று வகையான கீரைகளுக்கும் படம் கிடைக்கவில்லை.
பொடுதலை இலைக்கீரை...
பண்ணைக்கீரை...
-இப்படி கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் யாரும் கீரையே உண்பதில்லை. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை பெரியவர்கள் உண்ணப் பழக்கவில்லை என்று சொல்லலாம். அப்படியான வீடுகளில் வாரம் ஒருமுறையோ 15 நாட்களுக்கு ஒரு முறையோ மட்டுமே கீரை சமைக்கப்படுகிறது. சமைத்த கீரையிலும் பெரும்பாலான பகுதி வீணடிக்கப் படுகிறது. ஏனெனில் சமைத்த கீரையை பிற காய்கறிகளைப் போல ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதில் நச்சுத்தன்மை மிகுந்து விடும் என்பதால் சமைத்து உடனே உண்ணத்தக்க உணவாகவே கீரை கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு 6 ஆம் மாதம் முதலே கீரையை மசித்து சாப்பிடத் தந்து பழக்க வேண்டும்.
கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.
எனவே இன்று முதல் தினம் ஒரு கீரை என்ற மந்திரத்தை மனதில் ஒலிக்க விட்டு தினம், தினம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கீரை வகைகளில் முதல் 20 ல் ஏதோ ஒரு கீரையை மசித்தோ, வதக்கியோ, சாம்பாரில் அல்லது காரக் குழம்பில் கலந்தோ சமைத்துக் கொடுத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உண்ணப் பழக்குங்கள்.
குழந்தைகளே கீரை சாப்பிட விரும்புவார்கள் எனில் நிச்சயம் பெரியவர்களுக்கும் அந்தப் பழக்கம் தானாக கைவந்து விடும். பிறகு சாப்பாட்டில் உப்பில்லாமல் கூட உண்டு விடுவார்களாயிருக்கும் ஆனால் கீரை இல்லாமல் மட்டும் உண்ணவே மாட்டோம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?
கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’!
எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?
வீட்டிலேயே சுத்தமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி!