இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றைக் குழந்தைகள் தான். அரிதாக இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நல்ல குடிமக்களாக வளரச் செய்ய பெற்றோர்களான நமது மெனக்கெடல்கள் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இப்போது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் கஷ்டம் என்னவென்றால், நாம் சிரமப்பட்டு நம் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறோம் பேர்வழியென்று பெரும்பாலும் குழந்தைகளைக் கொஞ்சிக் கொஞ்சியோ அல்லது கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தோ வளர்த்து குட்டிச் சுவராக்கி விடுகிறோம். பிறகு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் கதையாக எல்லாம் முடிந்த இறுதிக் கட்டத்தில் நின்று கொண்டு அதுவரையிலான எல்லாத் தவறுகளுக்குமே குழந்தைகளை மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்திக் குறை கூறிக் கொண்டிருக்கிறோம். இது தவறு. இப்படியெல்லாம் இருந்தால் உங்களால் நிச்சயம் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் புதைத்து வைத்திருக்கும் ஆசைகளில் ஒன்றான சூப்பர் மாம் / சூப்பர் டாட் இலக்குகளை எப்போதும் எட்டவே முடியாது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது தான் என்ன? அதைத்தான் இந்த விடியோவில் பேசி இருக்கிறோம்.
பாருங்கள், பார்த்து விட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களது அரட்டையில் விடுபட்டுப் போனதாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களையும் கமெண்ட் பகுதி வாயிலாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டுமொரு டீ பிரேக் விடியோவில் சந்திக்கலாம்.
முந்தைய டீ பிரேக் வீடியோக்களைக் காண...
டீ பிரேக் -1 (https://www.youtube.com/watch?v=xWuZZ...)
டீ பிரேக் -2 (https://www.youtube.com/watch?v=lOyAx...)
டீ பிரேக் -3 (https://www.youtube.com/watch?v=Gfa8D...)
நன்றி.
கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன், உமா ஷக்தி
படத்தொகுப்பு: ராகேஷ் குமார்
ஒளிப்பதிவு: ஹேம்நாத் லட்சுமணன்
74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிரசவ விவகாரம், IFS மருத்துவர்களின் கண்டனத்தில் நியாயமிருக்கோ?!
அனாமத்தா 3 லட்சம் ரூபாயைப் பாதையில கண்டெடுத்தா நீங்க என்ன செய்வீங்க?!
தரமற்ற காய்கறி, பழங்களில் இருந்து எஸ்கேப் ஆவது எப்படி?
‘நெல்லை முதல் டெல்லி வரை’ கொள்ளையர்களை விரட்டும் பெண்களின் துணிவு! (விடியோ இணைப்பு)
‘உருவக்கேலி முதல் தெலுங்கானா கவர்னர் வரை’ தமிழிசையின் அரசியல் ராஜபாட்டை!
ட்ரெயின்ல பிச்சை எடுக்கற மாதிரி பாடாதன்னு இனிமே யாரையாவது கிண்டல் பண்ணீங்கன்னா தெரியும் சேதி!