நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 5,164 ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் தற்போது சோதிக்கப்பட்டு வரும் கரோனா பரிசோதனைக் கருவி, ஒருவருக்கு அந்த நோய்த்தொற்று உள்ளதா என்பதை 10 நிமிடத்தில் கண்டுபிடித்துச் சொல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘ஏசிஎஸ் நேனோ’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 804 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
தில்லியில் புதிதாக 1,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உத்தரகண்டில் மாநில அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
Watch : Chennai Metro Rail has come up with foot operated elevators to avoid use of hands. This is installed in @cmrlofficial headquarters in Koyambedu and plans are on to expand it to metro stations soon. @xpresstn @NewIndianXpress pic.twitter.com/F0nYi85Avh
— Omjasvin M D (@omjasvinMD) May 30, 2020
சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,869 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,300 ஆகவும் உள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். விரிவான செய்திக்கு..
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை ஆயிரமானது. இதையடுத்து இன்று மேலும் 45 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,045ஆக உயர்ந்துள்ளது.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கரோனா வார்டை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (மே 30) ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173,763 -ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 4971-ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். விரிவான செய்திக்கு..
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ஒரே ஒரு புலம்பெயர் தொழிலாளி, காலையில் 40 சப்பாத்தியும், மத்தியத்துக்கு 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விரிவான செய்திக்கு..
கரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கரோனா பாதித்து இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,161), இத்தாலி (33,229), பிரான்ஸ் (28,714), பிரேசில் (27,944), ஸ்பெயின் (27,121) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியா சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது. அதே சமயம், பலி எண்ணிக்கை 4,980 ஆக உள்ளது. இதனால் உலகளவில் பலி எண்ணிக்கையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.