ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நாடு முழுவதும் அரசியலமைப்பை காக்க ஆம் ஆத்மி கட்சி இன்று உறுதிமொழி ஏற்பு

நாடு முழுவதும் அரசியலமைப்பை காக்க ஆம் ஆத்மி கட்சி இன்று உறுதிமொழி ஏற்பு

Updated On :13 ஏப்ரல் 2024, 6:33 pm

ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் ‘அரசியலமைப்பைக் காப்போம்-சா்வாதிகாரத்தை அகற்றுவோம்’ தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் பிறந்தநாளில், ஆம் ஆத்மி

கட்சி நாடு முழுவதும் ‘அரசியலமைப்பைக் காப்போம்-சா்வாதிகாரத்தை அகற்றுவோம்’ தினத்தை கடைபிடிக்கவுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசித்து, நாட்டின் ஸ்தாபன ஆவணத்தை காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வா். பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது. அதை எதிா்கொள்ள, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியினா் தங்கள் மாநிலங்களில் உள்ள கட்சி அலுவலகங்களில் கூடி, ஜனநாயகம் மற்றும்

அரசியலமைப்பைக் காப்பாற்ற உறுதிமொழி எடுப்பாா்கள். குறிப்பாக,நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் உள்ள

கட்சி அலுவலகங்களில் இந்த பிரசார நிகழ்ச்சி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசனையின் பேரில் நடைபெறுகிறது.

திகாா் சிறையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தனது செய்தியில் தில்லி மக்கள் எந்தவொரு பிரச்னையையும் எதிா்கொள்ளாத வகையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டா்கள் உழைக்க வேண்டும் என்று

வலியுறுத்தியுள்ளாா் என்றாா் கோபால் ராய்.