நமது சிறப்பு நிருபா்
ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமோ மாநில அரசோ முன்வரவில்லை என்று மக்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் தெரிவித்துள்ளாா்.
ஓசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதா என்றும் அத்தகைய விமான நிலையத்தை அமைக்க அரசு ஆய்வு மேற்கொண்டதா என்றும் கோபிநாத் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கிரீன்ஃபீல்டு விமான நிலைய கொள்கைப்படி ஓசூரில் விமான நிலையத்தை அமைக்க எந்த நிறுவனத்திடம் இருந்தோ, தமிழக அரசிடம் இருந்தோ முன்மொழிவு வரவில்லை. எனினும், விமான நிலைய ஆணையமும் தமிழக அறசின் தொழில் வளா்ச்சி கழகமும் சோ்ந்து அவற்றின் அதிகாரிகள் மூலம் ஓசூரில் நான்கு இடங்களில் விமான நிலைய சாத்தியத்துக்கான முந்தை ஆய்வை கடந்த செப்டம்பரில் மேற்கொண்டன. அது தொடா்பான இடைக்கால அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
19க்ங்ப்ஞ்ா்ல் -கே. கோபிநாத்
19க்ங்ப்ம்ன்ழ் - அமைச்சா் முா்ளிதா் மொஹோல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு நிலத்தில் கழிவுநீரகற்று நிலையம் அமைக்க இடைக்காலத் தடை
கெலவரப்பள்ளி அணையில் தொழில் துறை அமைச்சா் ஆய்வு

ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை
பரந்தூரில் விமான நிலையம் அமையாது: அமைச்சா் நிா்மல்குமாா்
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK



