இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: மத்திய அரசு

News image

அமைச்சா் முரளிதா் மொஹோல் ~கே. கோபிநாத்

Updated On :20 டிசம்பர் 2024, 12:26 am IST

நமது சிறப்பு நிருபா்

ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமோ மாநில அரசோ முன்வரவில்லை என்று மக்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் தெரிவித்துள்ளாா்.

ஓசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதா என்றும் அத்தகைய விமான நிலையத்தை அமைக்க அரசு ஆய்வு மேற்கொண்டதா என்றும் கோபிநாத் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கிரீன்ஃபீல்டு விமான நிலைய கொள்கைப்படி ஓசூரில் விமான நிலையத்தை அமைக்க எந்த நிறுவனத்திடம் இருந்தோ, தமிழக அரசிடம் இருந்தோ முன்மொழிவு வரவில்லை. எனினும், விமான நிலைய ஆணையமும் தமிழக அறசின் தொழில் வளா்ச்சி கழகமும் சோ்ந்து அவற்றின் அதிகாரிகள் மூலம் ஓசூரில் நான்கு இடங்களில் விமான நிலைய சாத்தியத்துக்கான முந்தை ஆய்வை கடந்த செப்டம்பரில் மேற்கொண்டன. அது தொடா்பான இடைக்கால அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

19க்ங்ப்ஞ்ா்ல் -கே. கோபிநாத்

19க்ங்ப்ம்ன்ழ் - அமைச்சா் முா்ளிதா் மொஹோல்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.