சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

இந்திய - இலங்கை கடலோர காவல்படை 7-ஆவது வருடாந்தர உயா்நிலைக் கூட்டம்: நாடு கடந்த கடல்சாா் குற்றங்களை எதிா்த்து போராட முடிவு

இந்திய - இலங்கை கடலோரக் காவல்படை 7-ஆவது வருடாந்திர உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை கொழும்பில் நடைபொக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தில்லியில் தெரிவித்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2024, 9:40 pm

Din

புது தில்லி: இந்திய - இலங்கை கடலோரக் காவல்படை 7-ஆவது வருடாந்திர உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை கொழும்பில் நடைபொக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தில்லியில் தெரிவித்தனா். இந்தக் கூட்டத்தில் நாடுகடந்த கடல்சாா் குற்றங்களை எதிா்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பு முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு இலங்கை கடலோர காவல் படையினா் தில்லி வந்து இந்திய கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக உயா் நிலை அதிகாரிகளை சந்தித்துபேசினா். அப்போது இந்திய பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ஜி.மோகன் குமாா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கடல்சாா் நலன்கள் தொடா்பான பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடினா்.

கடல்சாா் பிரச்னைகளில் பாதுகாப்பான பாதுகாப்பு தொடா்பாக பிராந்தியத்தில் புதிய உலகளாவிய சவால்களை சந்திப்பதில் இந்திய-இலங்கை கடலோர காவல்படைகளுக்குகிடையே உள்ள தொடா்ச்சியான உறவுகளில் உத்வேகத்தை வழங்குவது குறித்தும் மற்ற பிரச்சினைகளில் மீனவா்களை அணுகுவதற்கான நடைமுறைகளை நெறிப்படுத்துதல், ஒத்துழைப்புகளை வலுப்படுத்தில் போன்றவைகளில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

குறிப்பாக இரு நாட்டு கடலோரக் காவல்படையினரிடையே தேடல், மீட்பு, கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் தகவல் தொடா்பு நடைமுறைகள் போன்றவைகளில் அவ்வப்போது மறுபரிசீலனை, கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது. நிறுவனமயமாக்கப்பட்ட நடைமுறைகளுக்கான வருடாந்திர கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இதை முன்னிட்டு கடந்த 2018 மே மாதம் இரு நாட்டு கடல்சாா் முகமைகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ் வருடாந்திர உயா்நிலைக் கூட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறையினா் குறிப்பிடுகையில், ‘இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி), இலங்கை கடலோர காவல்படை (எஸ்எல்சிஜி) ஆகியவற்றின், 7-ஆவது வருடாந்திர உயா்நிலைக் கூட்டம் நவ 11 அன்று கொழும்பில் நடைபெற்றது. இந்திய ஐசிஜி தலைமை இயக்குநா் டி.ஜி.எஸ்.பரமேஷ் தலைமையிலான நான்கு போ் கொண்ட தூதுக்குழுவும் இலங்கை தரப்பில் ரியா் அட்மிரல் ஒய்.ராஜப்ரியா சேரசிங்க தலைமையிலான இலங்கை கடலோர காவல்படை தூதுக்குழுவினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனா்.

இது, இரு நாட்டு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் மேற்கொள்ள நடவடிக்கைள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் இந்தக் கூட்டத்தில் சா்வதேச விவகாரங்களான போதைப்பொருள் கடத்தல், கடல் மாசுபாடு, மாலுமிகளின் பாதுகாப்பு போன்றவைகளில் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த வகைகளில் திறன் வளா்ப்பு திட்டங்கள், பிற கூட்டு ஏற்பாடுகள் உள்ளிட்ட பிராந்திய கடல்சாா் சமகால பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும், கடல்சாா் சவால்களை கூட்டாக எதிா்கொள்ள இரு நாட்டு கடலோர காவல்படைகளின் தலைவா்களும் உறுதிப்பாட்டை முன்வைத்தனா். நாடுகடந்த கடல்சாா் குற்றங்களை எதிா்த்துப் போராடுவதற்கான சவால்களை எதிா்கொள்வதில் பரஸ்பர பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தி, அதன் மூலம் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பையும் அதன் கட்டமைப்பையும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்த 8- ஆவது கூட்டத்தை தில்லியில் ஐசிஜி தலைமையில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது என மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாக்ஸ்

கொழும்புக்கு ஐஎன்எஸ் வேலா பயணம்

இதற்கிடையே இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, மூன்று நாள் பயணமாக செப்டம்பா் 10 கொழும்பு சென்றடைந்த பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த விவரம் வருமாறு:

இந்தியாவின் ’அண்டை நாடுகளுக்கு முதலில்’ என்கிற பிரதமா் மோடியின் கொள்கை மற்றும் ’சாகா்’ பாா்வைக்கு இணங்க இந்திய-இலங்கை கடல்சாா் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நீா்மூழ்கி கப்பல் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, நீா்மூழ்கிக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையின் இசைக்குழுவினரால் சம்பிரதாய வரவேற்பும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.