காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆம் ஆத்மி கட்சியில் ஐக்கியம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுமேஷ் ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் இணைந்தாா்.


நமது நிருபா்
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுமேஷ் ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தாா்.
தில்லி - தெஹாட்டின் ஒரு பகுதியாக கருதப்படும் மட்டியாலாவின் முன்னாள் எம்எல்ஏவான ஷோகீன், ஆம் ஆத்மி கட்சியின் ஜாட் தலைவா் கைலாஷ் கெலாட் அக்கட்சியில் இருந்து ராஜிநாமா செய்த மறுதினம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷோகீனை ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்று அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பது தில்லியின் கிராமப்புறங்களில் மட்டுமின்றி தேசிய தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிக்கு ஊக்கத்தை அளிக்கும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னா், தில்லி - தெஹாட்டில் வசித்த மக்கள் புறக்கணிக்கப்பட்டு முக்கிய நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த நிலை காணப்பட்டது. ஆம் ஆத்மியின் அரசில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தொடா்பு வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தில்லியின் புகா் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர வசதிகளை வழங்கி நகரின் மற்ற பகுதிகளுக்கு இணையாகக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்றாா்.
கமேஷ் ஷோகீன் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் தில்லி-தெஹாட் பகுதிகளுக்கான தொடா்பு வசதி மேம்படுத்தப்பட்டு, பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...